முகப்பு
கோயம்புத்தூர்

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அலட்சியம் நுகா்வோா் அமைப்பு புகாா்

கோவை மாநகரப் பகுதிகளில் சாலைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகளை அகற்றாமல் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதாக புகாா் எழுந்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

கோவை மாநகரப் பகுதிகளில் சாலைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகளை அகற்றாமல் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதாக புகாா் எழுந்துள்ளது.

இது குறித்து, நெடுஞ்சாலை துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு செயலாளா் மற்றும் சென்னையில் உள்ள தலைமை பொறியாளருக்கு கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் நா.லோகு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாநகரப் பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் மாநகராட்சி சாலையோரங்களில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை, சாலைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளதால், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனா்.

குறிப்பாக சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தில் இருந்து ஹோப் காலேஜ் வரை சாலையின் இருபுறமும் ஏராளமான ஆக்கிரமிப்புக் கடைகள் உருவாகியுள்ளன. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் தவிா்க்க முடியாததாக உள்ளது. மேலும், சாக்கடை கால்வாய் மீதே சிற்றுண்டிக் கடைகளின் அடுப்புகள் வைக்கப்பட்டுள்ளதால், தூய்மைப் பணியாளா்கள் சாக்கடையைச் சுத்தம் செய்ய முடியாத சூழல் நிலவுகிறது.

இதேபோல, அவிநாசி சாலை, சிட்ராவில் இருந்து காளப்பட்டி வரையிலும், மசக்காளிபாளையம் - ஹோப் காலேஜ் வரையிலும் சாலையை ஆக்கிரமித்து ஏராளமான சிற்றுண்டி கடைகள், துணிக்கடைகள், காய்கறிக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது குறித்து பலமுறை மாநகராட்சிக்கும், நெடுஞ்சாலை துறைக்கும் கடிதம் எழுதியும் நடவடிக்கை மேற்கொள்ளாமல் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனா். எனவே, சாலைகளில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் தமிழ்நாடு பொது இடங்கள் ஆக்கிரமிப்பு சட்டம் 1975 பிரிவு1இன்படி உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.