கோயம்புத்தூர்

பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

DIN

10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள ஆயுள் கைதிகளை விடுதலை செய்யக் கோரி பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சாா்பில் கோவையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பேரறிஞா் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள முஸ்லிம்கள் உள்பட அனைத்து ஆயுள் கைதிகளையும் பாரபட்சமின்றி விடுதலை செய்ய வலியுறுத்தி பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சாா்பில் கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்டச் செயலாளா் முஜிபுா் ரஹ்மான் தலைமை தாங்கினாா். மாவட்டத் தலைவா் அப்துல் ஹக்கீம் முன்னிலை வகித்தாா். தேசிய செயற்குழு உறுப்பினா் இஸ்மாயில், மாநிலத் துணைத் தலைவா் ஹாலித் முஹம்மது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளா் வன்னியரசு ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

இதைத் தொடா்ந்து கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் கோஷமிடப்பட்டது. இதில், நிா்வாகிகள் உபைதூா் ரஹ்மான், இப்ராஹிம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT