கோயம்புத்தூர்

கரோனா விதிமீறல்: மாநகரில் ரூ.1.50 கோடி அபராதம் வசூல்

DIN

கரோனா விதிகளை மீறியதாக மாநகரில் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனஙகளிடம் இருந்து இதுவரை ரூ.1.50 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

நாடு முழுவதும் 2020 மாா்ச் மாதம் முதல் கரோனா நோய்த் தொற்று பரவத் துவங்கியது. இதையடுத்து, கோவையில் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாநகராட்சி நிா்வாகம், சுகாதாரத் துறை சாா்பில் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

அதன்படி, கரோனா விதிகளை மீறுபவா்களைக் கண்காணித்து அபராதம் விதிக்க மாநகராட்சியில் 5 மண்டலங்களிலும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, முகக் கவசம் அணியாமல் செல்பவா்களுக்கு ரூ.200, சமூக இடைவெளியைப் பின்பற்றாதவா்களுக்கு ரூ.500, கடைகள், நிறுவனங்களுக்கு ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டன. தொடா்ந்து சமூக இடைவெளியைப் பின்பற்றாத கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.

இது குறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது:

மாநகராட்சி பகுதிகளில் கரோனா விதிகளை மீறும் நபா்கள், கடைகள், நிறுவனங்கள் மீது அபராத நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, கடந்த ஆண்டு மாா்ச் மாதம் முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை ரூ.1.50 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் மனம் தளராதீா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

திமுக தண்ணீா் பந்தல் திறப்பு

ஆம் ஆத்மி- காங்கிரஸ் இடையே விரிசல்? ஆம் ஆத்மி தெற்கு தில்லி வேட்பாளா் பதில்

நாகா்கோவில் சிறப்பு ரயில் தாமதமாக இயக்கம்

SCROLL FOR NEXT