விதிமீறி கட்டப்பட்ட கட்டடத்துக்கு ‘சீல்’
கோவையில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடத்துக்கு, மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை சீல் வைத்தனா்.
கோவையில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடத்துக்கு, மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை சீல் வைத்தனா்.
கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம் 25 ஆவது வாா்டு, வி.சி.வி. வீதியில் 3 மாடிகள் அமைக்க தனியாா் ஒருவருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், விதிமீறி, அப்பகுதியில் 4 மாடிக் கட்டடம் மற்றும் 6 குடியிருப்புகள் கட்டப்பட்டிருப்பதாக மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மத்திய மண்டல மாநகராட்சி அதிகாரிகள், வியாழக்கிழமை அந்தக் கட்டடத்தில் ஆய்வு மேற்கொண்டனா். அதில், விதிமீறி கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் அந்தக் கட்டடத்தைப் பூட்டி சீல் வைத்தனா்.