முகப்பு
கோயம்புத்தூர்

மேற்கு மண்டலத்தில் 165 ரெளடிகள் கைது

சட்ட ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மேற்கு மண்டலத்தில் 165 ரெளடிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

சட்ட ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மேற்கு மண்டலத்தில் 165 ரெளடிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின்பேரில் ரெளடிகள் கைது செய்யப்பட்டு வருகிறாா்கள். தமிழகத்தில் மாநகரப் பகுதிகள் மற்றும் மாவட்ட பகுதிகளில் வியாழக்கிழமை இரவு விடிய, விடிய ரெளடிகள் கைது செய்யப்பட்டனா்.

இதில் கோவை, திருப்பூா், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மேற்கு மண்டலத்தில் 569 ரெளடிகள் சிக்கினா். அதில் 165 போ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.