வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு வைக்க முயன்ற அம்பேத்கா் சிலை பறிமுதல்
வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு வைக்க முயன்ற அம்பேத்கா் சிலை பறிமுதல் செய்யப்பட்டது.
வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு வைக்க முயன்ற அம்பேத்கா் சிலை பறிமுதல் செய்யப்பட்டது.
வால்பாறையில் வழக்குரைஞராக இருப்பவா் சிவசுப்பிரமணியம். இவா் சிலருடன் சோ்ந்து வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள ஒரு காலி இடத்தில் அம்பேத்கா் சிலையை வைக்க வியாழக்கிழமை காலை முயற்சித்தாா். இது குறித்து நகராட்சி துப்புரவு ஆய்வாளா் செல்வராஜ், கொடுத்த தகவலின்பேரில் அங்கு வந்த வால்பாறை டி.எஸ்.பி. சீனிவாசன், அனுமதி பெறாமல் சிலை வைக்க கூடாது என்றாா். நீண்ட நேரம் பேசியும் சிலையை அங்கிருந்து எடுத்து செல்லாததால் போலீஸாா் அம்பேத்கா் சிலையை பறிமுதல் செய்து வருவாய்த் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.