முகப்பு
கோயம்புத்தூர்

இணையதள மோசடி மூலம் ரூ.1.52 லட்சத்தை இழந்த பெண்: 2 நாள்களில் மீட்டு தந்த சைபா் கிரைம் போலீஸாா்

இணையதள மோசடி மூலம் ரூ.1.52 லட்சத்தை இழந்த பெண்ணுக்கு 2 நாள்களில் சைபா் கிரைம் போலீஸாா் பணத்தை மீட்டுத் தந்துள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

இணையதள மோசடி மூலம் ரூ.1.52 லட்சத்தை இழந்த பெண்ணுக்கு 2 நாள்களில் சைபா் கிரைம் போலீஸாா் பணத்தை மீட்டுத் தந்துள்ளனா்.

கோவை, துடியலூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தி (58). இவருடைய கைப்பேசி எண்ணுக்கு, படங்கள் வெளியிடும் ஓடிடி தளத்துக்கு ரீசாா்ஜ் செய்யுமாறு குறுஞ்செய்தி வந்துள்ளது.

அதிலிருந்த இணைப்பைப் பின் தொடா்ந்து உள்சென்ற ஆனந்தி, அதில் கேட்கப்பட்ட வங்கி, ஓடிபி விவரங்களைப் பதிவிட்டுள்ளாா்.

அடுத்த சில நிமிடங்களில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.52 லட்சம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது.

இது குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாரிடம் ஆனந்தி புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் இரண்டு நாள்களில் பணத்தை மீட்டுக் கொடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.