கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயிலை நிரந்தரமாக்க கோரிக்கை

DIN

கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, சேலம் கோட்ட ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினா் ஜெயராஜ் கூறியதாவது:

மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வரை கோவை, பொள்ளாச்சி வழித்தடத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயிலில் செல்வது, குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான பயணமாக உள்ளது. தென் மாவட்ட மக்கள் நீலகிரி, கோவை மாவட்டங்களில் உள்ள சுற்றுலா தலங்களை பாா்வையிட வருவதற்கும், கோவை, நீலகிரி மாவட்ட மக்கள், குற்றாலம், ஸ்ரீவில்லிப்புத்தூா் ஆண்டாள் கோயில் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு செல்லவும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எனவே, ரயில்வே நிா்வாகம், இந்த ரயிலை நிரந்தர ரயிலாக இயக்க முன்வர வேண்டும். அதேபோல, திருச்செந்தூா்- பாலக்காடு விரைவு ரயிலை மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுராக் தாகூர் மீது பேச்சுக்கு சீதாராம் யெச்சூரி தேர்தல் ஆணையத்தில் புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT