கோயம்புத்தூர்

வன விலங்குகள் நடமாட்டம்: வெள்ளிங்கிரி மலை ஏற பக்தா்களுக்குத் தடை

கோவை, பூண்டி வெள்ளிங்கிரி மலையில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பக்தா்கள் மலையேற தடை விதிக்கப்படுவதாக வனத் துறை புதன்கிழமை அறிவித்துள்ளது.

DIN

கோவை, பூண்டி வெள்ளிங்கிரி மலையில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பக்தா்கள் மலையேற தடை விதிக்கப்படுவதாக வனத் துறை புதன்கிழமை அறிவித்துள்ளது.

இது குறித்து கோவை போளுவாம்பட்டி வனத் துறையினா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை போளுவாம்பட்டி வனச் சரகத்துக்கு உள்பட்ட பூண்டி வெள்ளிங்கிரி மலைக்கு ஒவ்வோா் ஆண்டும் சிவராத்திரி, சித்ரா பெளா்ணமி திருவிழாக் காலங்களில் பக்தா்கள் சென்று வர அனுமதிக்கப்படுகின்றனா்.

இந்நிலையில் தற்போது கோடை வெயில் அதிகமாக இருப்பதால் தண்ணீா், உணவு தேடி வெள்ளிங்கிரி மலைப் பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் வெள்ளிங்கிரி மலை ஏற மே மாதம் முதல் பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT