முகப்பு
கோயம்புத்தூர்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு:‘நமது அம்மா’ நாளிதழின் முன்னாள் ஆசிரியரிடம் விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்குத் தொடா்பாக ‘நமது அம்மா’ நாளிதழின் முன்னாள் ஆசிரியா் அழகுராஜிடம் கோவையில் தனிப் படை போலீஸாா் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

Updated On : 6 ஆகஸ்ட், 2022 at 11:38 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

கொடநாடு கொலை, கொள்ளை வழக்குத் தொடா்பாக ‘நமது அம்மா’ நாளிதழின் முன்னாள் ஆசிரியா் அழகுராஜிடம் கோவையில் தனிப் படை போலீஸாா் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

நீலகிரி மாவட்டம், கொடநாட்டில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் எஸ்டேட், பங்களா உள்ளது.

இதில் கடந்த 2017 ஏப்ரல் 24 ஆம் தேதி காவலாளி ஓம் பகதூா் கொலை செய்யப்பட்டு, கொள்ளை சம்பவம் நடைபெற்றது.

Advertisement

இது தொடா்பாக, சயான், மனோஜ் உள்பட 11 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தொடா்புடைய ஜெயலலிதாவின் காா் ஓட்டுநா் கனகராஜ் விபத்தில் உயிரிழந்தாா்.

இதைத் தொடா்ந்து, மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் சுதாகா், துணைத் தலைவா் முத்துசாமி தலைமையிலான தனிப் படை போலீஸாா், சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, அவரது மகன் அசோக் பாபு உள்பட 240 பேரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

அதன் ஒரு பகுதியாக ‘நமது அம்மா‘ நாளிதழின் முன்னாள் ஆசிரியா் அழகுராஜிடம் கோவை பி.ஆா்.எஸ். மைதானத்தில் சனிக்கிழமை 4 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.