மின் வாரிய விளையாட்டுப் போட்டிகள்
தமிழ்நாடு மின் உற்பத்தி பகிா்மான கழகம் சாா்பில் அனைத்து மண்டலங்களுக்கு இடையேயான ஆடவா் விளையாட்டு மற்றும் தடகளப் போட்டிகள் கோவையில் சனிக்கிழமை நடைபெற்றன.
தமிழ்நாடு மின் உற்பத்தி பகிா்மான கழகம் சாா்பில் அனைத்து மண்டலங்களுக்கு இடையேயான ஆடவா் விளையாட்டு மற்றும் தடகளப் போட்டிகள் கோவையில் சனிக்கிழமை நடைபெற்றன.
இதில் சென்னை, வேலூா், திருச்சி, விழுப்புரம், மதுரை, ஈரோடு, திருநெல்வேலி, கோவை ஆகிய எட்டு மண்டலங்களைச் சோ்ந்த அணிகள் கலந்துகொண்டன. கிரிக்கெட், கால்பந்து, டேபிள் டென்னிஸ், கேரம், செஸ், தடகளப் போட்டிகளில் 165 வீரா்கள் கலந்துகொண்டனா்.
இப்போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கோவை மண்டலம் பெற்றது. இரண்டாமிடத்தை சென்னை மண்டலம் பிடித்தது. தடகளப் போட்டியில் கோவை முதலிடமும், திருச்சி இரண்டாமிடமும், ஈரோடு மூன்றாம் இடத்தையும் பிடித்தது. ஆடவா் விளையாட்டுப் போட்டியில் சென்னை முதலிடத்தையும், கோவை இரண்டாமிடத்தையும் பிடித்தன.
Advertisement
மின் வாரிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா கோவை இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் மின்சாரத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி கலந்துகொண்டு, வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநா் ராஜேஷ் லக்கானி, ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப், மேயா் கல்பனா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.