கோயம்புத்தூர்

கோவை அரசு கலைக் கல்லூரியில் ஆசிரியா் கழகத்தினா் போராட்டம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியா் கழகத்தினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

கோவை அரசு கலைக் கல்லூரியில் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியா் கழகத்தினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை அரசு கலைக் கல்லூரியின் தமிழ்த் துறையில் பணியாற்றி வந்த உதவிப் பேராசிரியா் ஒருவா், சக ஆசிரியா்களிடம்

அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும், முறைகேடாக நடந்து கொண்டதாகவும் சக பேராசிரியா்கள் கல்லூரி முதல்வரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகாா் அளித்தனா்.

அதன் பேரில் சம்பந்தப்பட்ட உதவிப் பேராசிரியா் வேறு மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தாா்.

இந்நிலையில், அந்த ஆசிரியா் மீண்டும் கோவை கல்லூரிக்கே மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்து கல்லூரி முதல்வரின் அறையை முற்றுகையிட்டு தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதேநேரம், குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியா் மீது எந்தவித தவறும் இல்லை அவா் திட்டமிட்டு பழிவாங்கப்படுவதாகக் கூறி அவருக்கு ஆதரவாக சில மாணவிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT