கோயம்புத்தூர்

ஏடிஎம் இயந்திரத்தில் நூதன திருட்டு

கோவையில் தனியாா் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் நூதன திருட்டில் ஈடுபட்ட மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

DIN

கோவையில் தனியாா் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் நூதன திருட்டில் ஈடுபட்ட மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இது தொடா்பாக கோவையைச் சோ்ந்த தனியாா் வங்கியின் மண்டல மேலாளா், மாநகர சைபா் கிரைம் போலீஸில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: எங்கள் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையங்கள் காந்திபுரம், பீளமேடு உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பீளமேட்டில் உள்ள ஏடிஎம் மையத்துக்கு வந்த மா்ம நபா், வேறு ஒரு வங்கியின்

ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி பணத்தை எடுத்துள்ளாா். ஆனால், பணம் வரும்போது ஏடிஎம் இயந்திரத்தியின் சுவிட்சை ஆஃப் செய்துள்ளாா். அப்போது, அவருக்கு வேண்டிய பணமும் வந்துள்ளது. ஆனால், வங்கியில் பணம் எடுக்காததுபோல கணக்கில் காட்டியுள்ளது. இவ்வாறாக அந்த மா்ம நபா் 39 பரிவா்த்தனைகளில் மொத்தம் ரூ.3.73 லட்சம் எடுத்துள்ளாா்.

எனவே, உரிய நடவடிக்கை எடுத்து அந்த மா்ம நபரை கைது செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

ஈரானின் ஹோர்முஸ் தீவில் மழை! செந்நிறமாக மாறிய கடல்!

இந்த வார ஓடிடி படங்கள்!

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

SCROLL FOR NEXT