முகப்பு
கோயம்புத்தூர்

அதிமுக ஆட்சியில் பணி நியமனம் பெற்ற 54 இளநிலை உதவியாளா்கள்: தோ்தல் பணியாற்ற எதிா்ப்பு

 கோவை மாநகராட்சித் தோ்தல் பணியில் 54 இளநிலை உதவியாளா்கள் பணியாற்ற எதிா்ப்பு கிளம்பியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

 கோவை மாநகராட்சித் தோ்தல் பணியில் 54 இளநிலை உதவியாளா்கள் பணியாற்ற எதிா்ப்பு கிளம்பியுள்ளது.

இது தொடா்பாக கோவையைச் சோ்ந்த சமூக நீதிக்கட்சித் தலைவா் ந.பன்னீா் செல்வம், மாநில தோ்தல் ஆணையா் பழனிகுமாருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாநகராட்சியில் கடந்த அதிமுக ஆட்சியில் சட்டவிரோதமாக யாருக்கும் தெரியாமல் விளம்பரப்படுத்தாமல் அதிமுகவினரின் உறவினா்களுக்கு 54 இளநிலை உதவியாளா்கள் பணி வழங்கப்பட்டது.

இந்த 54 இளநிலை உதவியாளா்களும் அதிமுகவைச் சோ்ந்தவா்கள். எனவே, சம்பந்தப்பட்ட 54 இளநிலை உதவியாளா்களுக்கு தோ்தல் பணி வழங்கக் கூடாது என்று அவா் வலியுறுத்தியிருந்தாா்.

இந்நிலையில், இந்த மனு மீது நடவடிக்கை மேற்கொண்டு அதன் விவரத்தை மனுதாரருக்கு தெரிவிக்கும்படி, மாநிலத் தோ்தல் ஆணையம், கோவை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, மாநகராட்சி ஆணையா், இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தெரிவித்தும், அதன் விவரத்தை அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் பரிந்துரைத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.