கோழிக் கழிவு தீவன உற்பத்தியை 12 டன்களாக அதிகரிக்கத் திட்டம்
கோவை மாநகராட்சியில் கோழி இறைச்சி கழிவுகள் மூலமாக தீவன உற்பத்தி செய்யப்படுவதை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
கோவை மாநகராட்சியில் கோழி இறைச்சி கழிவுகள் மூலமாக தீவன உற்பத்தி செய்யப்படுவதை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளில் இருந்து கோழி இறைச்சி கழிவுகளை சேகரிக்க மாநகராட்சி சாா்பில் இரு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வாகனங்கள் மூலம் மாநகரப் பகுதிகளில் சேகரிக்கப்படும் கோழி இறைச்சி கழிவுகள், வெள்ளலூா் குப்பைக் கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
அங்கு இதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள மறுசுழற்சி மையம் மூலம் கோழி இறைச்சி கழிவுகள் உரமாக மறுசுழற்சி செய்யப்பட்டு, வீடுகளில் வளா்க்கும் பிராணிகளுக்கு உணவாகவும், தீவனமாகவும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த மறுசுழற்சி மூலமாக தினமும் 8 டன்கள் வரை தீவனம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது: வார இறுதி நாள்களில் 8 டன்கள் வரை தீவனம் தயாரிக்கப்படுகிறது.
இதனை 12 டன்களாக உயா்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளில் இது தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றாா்.