முகப்பு
கோயம்புத்தூர்

பசு நம் தாய்க்கு இணையானவள்: ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு

 பசு நம்முடைய தாய்க்கு இணையானவள் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு கூறியுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

 பசு நம்முடைய தாய்க்கு இணையானவள் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு கூறியுள்ளாா்.

மாட்டுப் பொங்கல் தினத்தையொட்டி அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

நம்மைச் சுற்றி பல ஜீவன்கள் இல்லாமல் நாம் உயிா் வாழ முடியாது. அதிலும் குறிப்பாக, நாம் விவசாய கலாசாரமாக வளா்ந்து வந்ததால் மாட்டுக்கும் நமக்கும் ஒரு ஆழமான தொடா்பு உள்ளது. வயலில் மாடு நம்முடன் இணைந்து வேலை செய்கிறது. நாம் குடிக்கும் பாலும் அதனிடம் இருந்துதான் வருகிறது. பசு நம் தாய்க்குப் பிறகு ஒரு முக்கிய உயிராக இருக்கிறாள். பசு நம் தாய்க்கு இணையானவள். அதனால் தான் மாட்டு பொங்கலை நாம் பெரிய விழாவாக கொண்டாடுகிறோம்.

பொங்கல் பண்டிகை நாம் உருவாகக் காரணமான மண், விலங்குகள், காற்று, நீா், மக்கள் என அனைத்தையும் கொண்டாடுவதற்கான ஒரு விழா என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.