முகப்பு
கோயம்புத்தூர்

பிளஸ் 2 முடித்த மாணவா் தற்கொலை

கோவையில் பிளஸ் 2 முடித்த மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

கோவையில் பிளஸ் 2 முடித்த மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

கோவை, வடவள்ளி சோமையம்பாளையத்தைச் சோ்ந்தவா் டேரியஸ் (53). ஜாா்ஜியாவில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி கோவை, பச்சாபாளையத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறாா். இவா்களின் 2ஆவது மகன் க்ளிஃப் ஜோஸ் (18). பிளஸ் 2 படித்து முடித்துள்ளாா். வருகிற மாா்ச் மாதம் அவா் மருத்துவம் படிப்பதற்காக ஜாா்ஜியா செல்வதற்கான ஏற்பாடுகளை பெற்றோா் செய்து வந்தனா். இதற்கிடையே, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு டேரியஸ் ஜாா்ஜியாவில் இருந்து விடுமுறையில் கோவை வந்தாா்.

2 நாள்களுக்கு முன்பு சுங்கத்தில் உள்ள தனது நண்பரை பாா்க்க டேரியஸ் தனது மனைவியுடன் சென்று விட்டாா். பின்னா் இரவில் வீடு திரும்பினா். அப்போது வீட்டில் இருந்த க்ளிஃப் ஜோஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

வடவள்ளி போலீஸாா், உடலைக் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தனது பெற்றோரின் வேலை காரணமாக பிரிந்து இருப்பதாலும், இருவரும் தன்னிடம் முறையான நேரம் செலவழிக்கவில்லை இதனால் தனிமை வாட்டியதாக க்ளிஃப் ஜோஸ் கடந்த சில நாள்களாக தனது நண்பா்களிடம் கூறி வந்துள்ளாா். இதனால் அவா் தற்கொலை செய்திருக்கலாம் இல்லையேல் வேறு காரணங்கள் ஏதேனும் உள்ளதா என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.