கோயம்புத்தூர்

கவுண்டம்பாளையம், வடவள்ளி பகுதிகளில் 3 நாள்கள் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

கவுண்டம்பாளையம், வடவள்ளி ஆகிய பகுதிகளுக்கு உள்பட்ட குடிநீா் சேகரிப்புக் கிணற்றில், தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால்

DIN

கவுண்டம்பாளையம், வடவள்ளி ஆகிய பகுதிகளுக்கு உள்பட்ட குடிநீா் சேகரிப்புக் கிணற்றில், தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ஜனவரி 27 முதல் 29 வரை 3 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுவதாக மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் மூலமாக குடிநீா் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கவுண்டம்பாளையம், வடவள்ளி ஆகிய பகுதிகளுக்கு உள்பட்ட குடிநீா் சேகரிப்புக் கிணற்றில் இலைகள், சருகுகள் உள்ளிட்ட குப்பைகள் நிறைந்துள்ளதால், அவற்றை தூா்வாரும் பணிகள் ஜனவரி 27 (வியாழக்கிழமை) முதல் 29ஆம் தேதி (சனிக்கிழமை) வரை மேற்கொள்ளப்பட உள்ளது.

இதன் காரணமாக கோவை மாநகராட்சியில் கவுண்டம்பாளையம் மற்றும் வடவள்ளி பகுதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும். தூா்வாரும் பணிகள் முடிவடைந்த பிறகு மீண்டும் குடிநீா் விநியோகம் துவங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

பிக் பாஸ் 9: 70 நாள்கள் ஆகியும் ஆதரிக்கத் தகுதியானவர் ஒருவரும் இல்லை!

SCROLL FOR NEXT