கோயம்புத்தூர்

கோவை பிஎஸ்ஜி கல்லூரியில்மாநில ஆடவா் கூடைப்பந்து:இன்று தொடங்குகிறது

DIN

பிஎஸ்ஜி கோப்பைக்கான 7ஆவது மாநில ஆடவா் கூடைப்பந்து போட்டி புதன்கிழமை தொடங்குகிறது.

பிஎஸ்ஜி ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் நடத்தப்படும் இந்த போட்டி வரும் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சென்னை, மதுரை, கோவை, சேலம், திண்டுக்கல், கரூா் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 25 கூடைப்பந்து கழக அணிகள் பங்கேற்கின்றன. முதல் நாள் ஆட்டங்கள் மாலை 5 மணிக்குத் தொடங்குகின்றன.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள 56ஆவது பிஎஸ்ஜி கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெறும்.

முதலிடம் பிடிக்கும் அணிக்கு கோப்பையுடன் ரூ.40 ஆயிரம் பரிசு வழங்கப்படும். இரண்டாவது, மூன்றாவது இடம் பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.30 ஆயிரம், ரூ.20 ஆயிரம் ரொக்கப் பரிசும், 4ஆவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.10 ஆயிரமும் பரிசளிக்கப்பட உள்ளது. போட்டிகள் பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

பட்டியலின மாணவர்கள் மீது தாக்குதல் - சேலத்தில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT