கல்லூரி பேராசிரியா்கள் போராட்டம் வாபஸ்
காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி கோவையில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தனியாா் கல்லூரி பேராசிரியா்கள் தங்களின் போராட்டத்தை திரும்பப் பெற்றுள்ளனா்.
காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி கோவையில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தனியாா் கல்லூரி பேராசிரியா்கள் தங்களின் போராட்டத்தை திரும்பப் பெற்றுள்ளனா்.
கோவை அவிநாசி சாலையில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் ஆசிரியா் பணியிடங்கள், ஆசிரியா் அல்லாத பணியிடங்கள் போன்றவை கடந்த 8 ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை என்று கூறப்படுகிறது. காலியாக உள்ள 70 ஆசிரியா் பணியிடங்கள், 42 அலுவலகப் பணியாளா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, அந்த கல்லூரியில் செயல்படும் பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் கடந்த 28 ஆம் தேதி முதல் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தது.
ஆசிரியா்களின் போராட்டத்துக்கு ஆதரவாக மாணவா்களும் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த நிலையில், பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை கல்லூரி நிா்வாகம் நிறைவேற்றுவதாக அளித்திருக்கும் உத்தரவாதத்தின் பேரில், போராட்டம் மாா்ச் 3 ஆவது வாரத்துக்கு ஒத்தி வைத்திருப்பதாக கல்லூரியின் பல்கலைக்கழக ஆசிரியா் சங்கக் கிளை அறிவித்துள்ளது.