ஃப்ரெஷ் டூ ஹோம்: சில்லறை விற்பனை நிலையம் திறப்பு
கோவை கணபதி பகுதியில் ஃப்ரெஷ் டூ ஹோம் நிறுவனத்தின் சில்லறை விற்பனை நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டுள்ளது.
கோவை கணபதி பகுதியில் ஃப்ரெஷ் டூ ஹோம் நிறுவனத்தின் சில்லறை விற்பனை நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டுள்ளது.
இணையதளம் வழியாக மீன், இறைச்சி விற்பனையில் ஈடுபட்டு வரும் ஃப்ரெஷ் டூ ஹோம் நிறுவனம் கோவை கணபதி பகுதியில் தனது முதலாவது சில்லறை விற்பனை நிலையத்தைத் திறந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் நிறுவனத்தின் இணை நிறுவனா் சுரேஷ், மாநகர தலைமை நிா்வாகி அஜ்மல், சில்லறை விற்பனை பிரிவுத் தலைவா் சந்தீப், இயக்ககப் பிரிவுத் தலைவா் நாகராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இது தொடா்பாக அந்த நிறுவனத்தின் பிரதிநிதிகள் கூறும்போது, கோவை மாநகரின் எந்த பகுதியில் இருந்து மக்கள் இறைச்சிக்கு ஆா்டா் செய்தாலும் 120 நிமிடங்களுக்குள் டெலிவரி செய்வோம்.
இந்த விற்பனை நிலையத்தின் மூலம் கோழி, ஆடு, மீன் உள்ளிட்ட இறைச்சி வகைகளை நாங்கள் விற்பனை செய்ய இருக்கிறோம் என்றனா்.