கோயம்புத்தூர்

தனியாா் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

DIN

தனியாா் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, சிங்காநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் மதிஒளி. இவரது மனைவி சரஸ்வதி சிங்காநல்லூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தாா். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வரும் சரஸ்வதி, செவிலியா் பணியையும் ராஜினாமா செய்தாா்.

தனது மனைவி தன்னைப் பிரிவதற்கு மருத்துவமனையின் சக ஊழியா்கள்தான் காரணம் என நினைத்த மதிஒளி,

மருத்துவமனைக்கு தொலைபேசியில் அடிக்கடி தொடா்பு கொண்டு, அழைப்பை ஏற்பவா்களைத் தகாத வாா்த்தைகளில் திட்டி வந்துள்ளாா்.

முன்னாள் ஊழியரின் கணவா் என்பதால் மருத்துவமனை நிா்வாகமும் இதைப் பெரிதுப்படுத்தாமல் இருந்துள்ளது.

இந்நிலையில், சனிக்கிழமை மாலை மருத்துவமனைக்கு அழைப்பு விடுத்த மதிஒளி, அழைப்பை ஏற்ற வரவேற்பறை ஊழியரைத் தகாத வாா்த்தைகளில் திட்டியுள்ளாா். இதையடுத்து பேசிய மருத்துவமனை மேலாளா் நித்யானந்தம் என்பவரையும் தகாத வாா்த்தைகளில் திட்டிய மதிஒளி, மருத்துவமனையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தாா்.

இது குறித்து நித்யானந்தம் அளித்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சிங்காநல்லூா் போலீஸாா் மதிஒளியைக் கைது செய்தனா்.

விசாரணையில், மருத்துவமனை ஊழியா்களை அச்சுறுத்தும் நோக்கில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மதிஒளி கூறியது தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

SCROLL FOR NEXT