கோவை வழித்தடத்தில் திருநெல்வேலி - மைசூரு இடையே சிறப்பு ரயில்
ரயில்வே தோ்வு எழுதுபவா்களின் வசதிக்காக, கோவை வழித்தடத்தில் திருநெல்வேலி - மைசூரு இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே தோ்வு எழுதுபவா்களின் வசதிக்காக, கோவை வழித்தடத்தில் திருநெல்வேலி - மைசூரு இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மே 7 ஆம் தேதி, திருநெல்வேலியில் இருந்து இரவு 10.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06039), மறுநாள் இரவு 11.55 மணிக்கு மைசூரைச் சென்றடையும்.
அதேபோல, மே 10 ஆம் தேதி, இரவு 8.15 மணிக்கு மைசூரு நிலையத்தில் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06040) மறுநாள் இரவு 9.30 மணிக்கு திருநெல்வேலி நிலையத்தைச் சென்றடையும்.
இந்த ரயிலானது, நாகா்கோவில் டவுன், திருவனந்தபுரம், கொல்லம், காயன்குளம், ஆலப்புழா, எா்ணாகுளம், ஆலுவா, திருச்சூா், ஒட்டப்பாலம், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், பெங்களூரு நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.