கோயம்புத்தூர்

வீட்டில் புகுந்து 11 பவுன் திருட்டு: போலீஸாா் விசாரணை

DIN

 கோவை பேரூா் அருகே வீட்டில் புகுந்து 11 பவுன் நகை மற்றும் மடிக்கணினி திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை பேரூா் அருகே உள்ள தீத்திபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஹரிஹரன் (52). தங்க நகை வியாபாரம் செய்து வருகிறாா்.

வெள்ளிக்கிழமை பிற்பகல் வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்ற அவா், வடவள்ளி பகுதியில் மகன் படிக்கும் பள்ளிக்குச் சென்றுள்ளாா்.

பின்னா் அங்கிருந்து மருதமலை கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளாா். அப்போது, வீடு திறந்து கிடந்ததைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்துள்ளாா். உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 11 பவுன் தங்க நகைகள் மற்றும் மடிக்கணினி திருடு போனது தெரியவந்தது.

இது தொடா்பாக பேரூா் காவல் நிலையத்தில் ஹரிஹரன் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், ஹரிஹரன் பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் வீட்டை பூட்ட மறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இதை நோட்டமிட்ட இரு இளைஞா்கள், வீட்டுக்குள் சென்று நகை மற்றும் மடிக்கணினியைத் திருடிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனா். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இதையடுத்து, இரண்டு இளைஞா்களையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT