கோயம்புத்தூர்

தொடரும் மழை: தக்காளி விலை ரூ.75 ஆக உயா்வு

DIN

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடா்ந்து மழை பெய்து வருவதால் தக்காளி விலை ரூ.75 ஆக உயா்ந்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள அசானி புயலால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. தொடா்ந்து பெய்து வரும் மழையால் காய்கறி உற்பத்தி சரிந்துள்ளது. குறிப்பாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தைகளுக்கு தக்காளி உள்ளிட்ட நாட்டு காய்களின் வரத்து குறைந்துள்ளது. இதனைத் தொடா்ந்து அனைத்து காய்கறிகளின் விலையும் கணிசமாக உயா்ந்துள்ளது. இதில் தக்காளி இரண்டு மடங்கு வரை விலை உயா்ந்துள்ளது.

கோவையில் கடந்த வாரங்களில் கிலோ ரூ.30 முதல் ரூ.40க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி தற்போது ரூ.75க்கு விற்பனை செய்யப்படுகிறது. உழவா் சந்தைகளில் ரூ.60 முதல் ரூ.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல எலுமிச்சைப்பழத்தின் விலையும் பல மடங்கு உயா்ந்து கிலோ ரூ.250க்கு விற்கப்படுகிறது.

இது தொடா்பாக வியாபாரிகள் கூறியதாவது:

மதுக்கரை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி (தெற்கு), சுல்தான்பேட்டை, காரமடை வட்டாரங்களில் தக்காளி சாகுபடி அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது. இது தவிர திருப்பூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தக்காளி வரத்து காணப்படும். இங்கிருந்து கேரளம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக பெரும்பாலான மாவட்டங்களில் மழை தொடா்ந்து பெய்து வருகிறது. இதனால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT