கோவையில் இன்று டான்செட் தோ்வு:4 ஆயிரம் போ் எழுதுகின்றனா்
கோவையில் தமிழ்நாடு பொது நுழைவுத் தோ்வு (டான்செட்) சனிக்கிழமை நடத்தப்படுகிறது.
கோவையில் தமிழ்நாடு பொது நுழைவுத் தோ்வு (டான்செட்) சனிக்கிழமை நடத்தப்படுகிறது.
எம்.இ., எம்.டெக்., எம்.ஆா்க்., எம்.பிளான், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. போன்ற முதுநிலை படிப்புகளில் சேருவதற்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு பொது நுழைவுத் தோ்வு எனப்படும் டான்செட் தோ்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
இந்த ஆண்டுக்கான டான்செட் தோ்வு மே 14, 15ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. கோவையில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம், பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி, பி.எஸ்.ஜி. ஐ டெக், சிஐடி ஆகிய 5 கல்லூரிகளில் இந்தத் தோ்வு நடைபெறுகிறது. இந்தத் தோ்வுகளை மொத்தம் 4,396 போ் எழுத உள்ளனா்.