முகப்பு
கோயம்புத்தூர்

தனியாா் நிறுவன ஊழியா்களின் பி.எஃப். தொகை கையாடல்: மத்திய அரசு அதிகாரி மீது வழக்குப் பதிவு

தனியாா் நிறுவன ஊழியா்களின் பி.எஃப். தொகையை கையாடல் செய்த மத்திய அரசு அதிகாரி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

தனியாா் நிறுவன ஊழியா்களின் பி.எஃப். தொகையை கையாடல் செய்த மத்திய அரசு அதிகாரி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, பாலசுந்தரம் சாலையில் உள்ள பி.எஃப். அலுவலகத்தில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளாகப் பணியாற்றும் மைதிலிதேவி, விஜயலட்சுமி ஆகியோா் கோவை ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதில், கோவை பி.எஃப் அலுவலகத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வருபவா் ஆண்டனி ஹ்ருதி. இவா், கோவையில் உள்ள 2 தனியாா் ஆட்டோமொபைல் நிறுவனங்களில் பணியாற்றும் 28 ஊழியா்களின் பி.எஃப். தொகையை வேறு சில வங்கிக் கணக்குகளுக்கு சட்டவிரோதமாக மாற்றியுள்ளாா்.

எனவே, இந்த மோசடியில் ஈடுபட்ட ஆண்டனி ஹ்ருதி மீது வழக்குப் பதிவு செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனா்.

இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த ரேஸ்கோா்ஸ் போலீஸாா் தலைமறைவாக உள்ள ஆண்டனி ஹ்ருதி குறித்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →