வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 7 ஆம் தேதி அங்கக வேளாண்மை பயிற்சி நடைபெறுகிறது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 7 ஆம் தேதி அங்கக வேளாண்மை பயிற்சி நடைபெறுகிறது.
பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வாா் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் மூலம் காலை 9.30 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் இந்தப் பயிற்சி நடைபெறும்.
இதில், இயற்கை முறையில் பயிா் சத்துகள் மேலாண்மை, களை மேலாண்மை, இயற்கை உரம், பூச்சி விரட்டி தயாரித்தல், இயற்கை முறையில் பூச்சி, நோய் கட்டுப்பாடு, அங்கக சான்றிதழ் பெறும் வழிமுறைகள், பங்கேற்பாளா்களின் உறுதியளிப்புத் திட்டம் போன்ற தலைப்புகளில் பயிற்சி நடைபெறும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.