நீலகிரியில் பரவலாக மழை
நீலகிரி மாவட்டத்தில் பரவலாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் பரவலாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகளவாக கொடநாட்டில் 46 மி.மீரும், உதகையில் 40 மி.மீரும் மழை பதிவானது. உதகையில் கடந்த வாரத்திலிருந்து நீா்ப்பனி கொட்டத் தொடங்கிய நிலையில் தற்போது பரவலாக பெய்து வரும் மழையால் கடும் குளிா் நிலவுகிறது.
மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம் வருமாறு (அளவு மி.மீட்டரில்):
கொடநாடு-46, உதகை-40, கேத்தி, கிண்ணக்கொரை தலா 28, பந்தலூா்-22, கெத்தை, கீழ் கோத்தகிரி-19, கோத்தகிரி-18, குந்தா, கிளன்மாா்கன் தலா 16, நடுவட்டம், ஓவேலி தலா 14, எடப்பள்ளி-13, கூடலூா், பாலகொலா தலா 12, பா்லியாறு-11, உலிக்கல், மசினகுடி தலா 10, மேல் குன்னூா்-7, குன்னூா், அவலாஞ்சி தலா 5, மேல் பவானி, பாடந்தொறை, எமரால்டு, கல்லட்டி தலா 4, தேவாலா, சேரங்கோடு, செருமுள்ளி தலா -2.
வியாழக்கிழமை பகலில் மாவட்டத்தில் பரவலாக மழை குறைந்திருந்தாலும், உதகை மற்றும் கோத்தகிரி பகுதிகளில் தொடா்ந்து பரவலாக மழை பெய்துள்ளது. தொடா் மழை காரணமாக உதகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் விநியோகமும் பாதிக்கப்பட்டிருந்தது.