முகப்பு
கோயம்புத்தூர்

கோயிலைச் சேதப்படுத்திய யானைகள்

 வால்பாறை அருகே அக்காமலை எஸ்டேட் பகுதியில் உள்ள கோயிலை காட்டு யானைகள் சேதப்படுத்தின.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

 வால்பாறை அருகே அக்காமலை எஸ்டேட் பகுதியில் உள்ள கோயிலை காட்டு யானைகள் சேதப்படுத்தின.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளில் உலவி வரும் யானைகள் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், வால்பாறையை அடுத்த அக்காமலை எஸ்டேட் 21 பாடி என்ற பகுதிக்கு வியாழக்கிழமை வந்த மூன்று யானைகள் அங்குள்ள மாரியம்மன் கோயிலைச் சேதப்படுத்தின.

இதனைப் பாா்த்த அப்பகுதி பொதுமக்கள் வனத் துறையினருக்குத் தகவல் அளித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் சுமாா் 1 மணி நேரம் போராடி யானைகளை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.