கோவை உக்கடத்தல் காரில் சிலிண்டர் வெடித்து சிதறிய நிகழ்வு தொடர்பாக சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்கின்றனர்.
கோவை மாவட்டம், டவுன்ஹால் பகுதி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் நேற்று அதிகாலை காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் முழுவதும் சேதமடைந்ததோடு காரில் இருந்த உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபீன் என்ற இளைஞர் உடல் கருகி உயிரிழந்தார். இது தொடர்பாக டிஜிபி, ஏடிஜிபி உட்பட காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதையும் படிக்க- தீவிர புயலாக சிட்ரங் வலுவடையும்: வானிலை ஆய்வு மையம்
சென்னையில் இருந்து தடய அறிவியல் துறையினரும் தடயங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் இருந்து ஆணிகள், கோழிகுண்டுகள் ஆகியவை எடுக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை இரவு 11.25 மணியளவில் ஜமேஷா முபீன் இல்லத்தில் இருந்து அவர் உட்பட 5 பேர் மர்ம மூட்டையை எடுத்து சென்றுள்ளனர்.
இது அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து அந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு அவர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த மூட்டை என்னவாக இருக்கும் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.