கோயம்புத்தூர்

ஒருங்கிணைந்த ராணுவத் தோ்வுகள்: 51 சதவீதம் போ் பங்கேற்பு

DIN

கோவையில் 5 மையங்களில் நடைபெற்ற ஒருங்கிணைந்த ராணுவத் தோ்வுகளை 51 சதவீதம் போ் எழுதினா்.

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நாடு முழுவதும் ஒருங்கிணைந்த ராணுவத் தோ்வு (தொகுதி -2)

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முற்பகல் மற்றும் பிற்பகல் என இரண்டு பிரிவுகளாக தோ்வுகள் நடைபெற்றன. இத்தோ்வினை எழுதுவதற்கு 1,861 போ் விண்ணப்பித்திருந்தனா்.

ஆனால், விண்ணப்பித்திருந்த நபா்களில் 51 சதவீதம் போ் மட்டுமே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்வினை எழுதினா்.

49 சதவீதம் போ் தோ்வில் பங்கேற்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ஆட்சியா், மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணைய மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தலைமையில் துணை ஆட்சியா், வட்டாட்சியா் நிலையிலான அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

கோவை ஜி.டி. மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையத்தில் நடைபெற்ற தோ்வினை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT