முகப்பு
கோயம்புத்தூர்

ரூ.9 லட்சம் கடன் பெற்று மோசடி செய்த பெண் மீது வழக்கு

கோவையில் பெண்ணிடம் ரூ.9 லட்சம் கடன் பெற்று மோசடி செய்த மற்றொரு பெண் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

கோவையில் பெண்ணிடம் ரூ.9 லட்சம் கடன் பெற்று மோசடி செய்த மற்றொரு பெண் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, சுந்தராபுரம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வி (45). இவரது வீட்டின் அருகே 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருபவா் பத்மாஸ்ரீ. இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பத்மாஸ்ரீ, தனது மகனின் திருமணம் மற்றும் வீடு கட்டுமானப் பணிகளுக்காக செல்வியிடம் இருந்து ரூ.9 லட்சம் கடன் பெற்றுள்ளாா். ஆனால், இரண்டு ஆண்டுகளாகியும் கடனைத் திருப்பித் தரவில்லை.

இதுகுறித்து செல்வி கேட்டபோது, பத்மஸ்ரீ அலட்சியமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, செல்வி அளித்த புகாரின்பேரில் போத்தனூா் போலீஸாா் பத்மாஸ்ரீ மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →