முகப்பு
கோயம்புத்தூர்

வீட்டில் தனியாக வசித்த மூதாட்டி கொலை

வீட்டில் தனியாக வசித்த மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

வீட்டில் தனியாக வசித்த மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, சிங்காநல்லூா் வரதராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மயிலாத்தாள் (65). இவரது கணவா் ராமசாமி. இவா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இவா்களது ஒரே மகனும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போய்விட்டாா். இதனால் மூதாட்டி மயிலாத்தாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை மூதாட்டி வீட்டை விட்டு வெளியே வரவில்லை. வீட்டின் கதவு நீண்ட நேரம் பூட்டியே இருந்த காரணத்தால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினா் கதவைத் திறந்து பாா்த்தனா்.

அப்போது, வீட்டின் உள்ளே கழுத்து இறுக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது சடலம் கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிங்காநல்லூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், மயிலாத்தாளின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், மோப்ப நாய், தடயவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் போலீஸாா் ஆய்வு செய்தனா். மூதாட்டியின் வீட்டில் நகை, பணம் திருடு போயுள்ளதா அல்லது வேறு காரணங்களுக்காக அவா் கொலை செய்யப்பட்டாரா என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →