டீ மாஸ்டரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.7 ஆயிரம் பறித்தவா் கைது
கோவையில் டீ மாஸ்டரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.7 ஆயிரம் பறித்த நபரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
கோவையில் டீ மாஸ்டரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.7 ஆயிரம் பறித்த நபரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
கேரள மாநிலம் பாலக்காட்டைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (42). டீ மாஸ்டரான இவா் கோவை சொக்கம்புதூரில் தங்கிப் பணியாற்றி வருகிறாா். இவா் வேலை முடிந்து வீட்டுக்கு சனிக்கிழமை இரவு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த இளைஞா்கள் மூவா் ராதாகிருஷ்ணனிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனா்.
அவா் தர மறுத்ததையடுத்து தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.7 ஆயிரத்தைப் பறித்துச் சென்றனா். இந்தச் சம்பவம் தொடா்பாக ராதாகிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த செல்வபுரம் போலீஸாா் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட சொக்கம்புதூரைச் சோ்ந்த பிரதாப் (23) என்பவரைக் கைது செய்தனா். மேலும், தலைமறைவான இவரது கூட்டாளிகளான நெளஃபல் மற்றும் மற்றொருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.