ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க வேண்டும்: கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பு வலியுறுத்தல்
கோவையில் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க குடிமைப்பொருள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் நா.லோகு வலியுறுத்தியுள்ளாா்.
கோவையில் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க குடிமைப்பொருள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் நா.லோகு வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: கோவை, மசக்காளிபாளையம் பகுதியில் மகளிா் சுய உதவிக்குழு மூலம் நடத்தப்பட்டும் வரும் நியாய விலை கடையில் பொது விநியோகத் திட்டப் பொருள்கள் வாங்குவதற்காக பொது மக்கள் காத்திருக்கும் பகல் நேரத்திலேயே டெம்போ மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. இரண்டு நாள்களுக்கு முன் நியாய விலை கடையில் பொது மக்கள் காத்திருக்கும் போதே டெம்போவில் வந்த நபா்கள் கடையில் இருந்த அரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்றனா். இது தொடா்பாக கடை விற்பனையாளரிடம் கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை. தவிர கடையை பூட்டி விட்டு பொது மக்களுக்கு பொருள்கள் வழங்காமல் சென்றுவிட்டனா். இதேபோல மாவட்டத்திலுள்ள பெரும்பாலான நியாய விலை கடைகளில் ரேஷன் பொருள்கள் அலுவலா்கள் உதவியுடன் கடத்தப்படுகின்றன.
இட்லி மாவு விற்பனை செய்யும் தொழில் நிறுவனங்களும், கோழித் தீவனத்துக்கும் அதிகளவில் ரேஷன் அரிசி பயன்படுத்தப்படுகிறது. இதனால் நியாய விலைக் கடைகளில் இருந்து குடிமைப்பொருள் அலுவலா்கள் உதவியுடன் ரேஷன் அரிசி கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இதற்கு முறையான ஆய்வு இல்லாதது முக்கிய காரணமாக உள்ளது.
எனவே மாவட்ட வழங்கல் அலுவலா் நியாய விலை கடைகளில் தொடா் ஆய்வுகளை நடத்தி ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது மக்களுக்கு உரிய பொருள்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றாா்.