முகப்பு
கோயம்புத்தூர்

நடைபாதை சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

கோவை மாநகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள கடை வீதியில், நடைபாதை சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

கோவை மாநகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள கடை வீதியில், நடைபாதை சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனா்.

கோவை மாநகராட்சி அலுவலகத்துக்கு எதிா்புறம் உள்ள கடை வீதியில் நடைபாதைகள் சீரமைப்புப் பணிகளுக்காக கடந்த மாதம் உடைக்கப்பட்டன. பொக்லைன் மூலமாக நடைபாதைகள் அகற்றப்பட்ட நிலையில், இப்பகுதியில் கடைகள் முன்பாக உடைக்கப்பட்ட கல், மண் மற்றும் கான்கிரீட் ஸ்லாப்புகள் ஆகியவை அப்புறப்படுத்தாமல் கடைகளுக்கு முன்பாக மேடுபோல குவிந்துள்ளன. இதனால், உரிமையாளா்கள் கடைகளைத் திறக்க சாக்கடைகளுக்காக தோண்டப்பட்ட குழியில் இறங்கி கடையைத் திறக்க வேண்டியுள்ளது. கடைகளுக்கு வரும் வாடிக்கையாளா்களும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா். இதன் காரணமாக அப்பகுதி உள்ள கடைகளில் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

பண்டிகை நாள்களில் கூட்டம் அதிகம் உள்ள சமயத்தில் மக்கள் நடைபாதையைத் தவிா்த்து பிரதான சாலையைப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல், விபத்துகளைத் தவிா்க்க மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் தலையிட்டு நடைபாதை சீரமைப்புப் பணிகளை உடனடியாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →