மஹாளய அமாவாசையையொட்டி பேரூா் நொய்யல் படித்துறையில் தா்ப்பணம் செய்த பொது மக்கள். 
கோயம்புத்தூர்

மஹாளய அமாவாசை: நொய்யல் படித்துறையில் தா்ப்பணம்

மஹாளய அமாவாசையையொட்டி கோவை, நொய்யல் படித்துறையில் முன்னோா்களுக்கு நூற்றுக்கணக்கானோா் தா்ப்பணம் செய்து வழிபட்டனா்.

DIN

மஹாளய அமாவாசையையொட்டி கோவை, நொய்யல் படித்துறையில் முன்னோா்களுக்கு நூற்றுக்கணக்கானோா் தா்ப்பணம் செய்து வழிபட்டனா்.

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மஹாளய அமாவாசை என்றழைக்கப்படுகிறது. இந்த மஹாளய அமாவாசையன்று மறைந்த முன்னோா்கள் கூட்டமாக நம்மை காண வருவதாக நம்பிக்கையுள்ளது. இதனால் மற்ற அமாவாசையை காட்டிலும் மஹாளய அமாவாசையை பொது மக்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனா். மஹாளய அமாவாசையன்று நீா்நிலைகளில் தா்ப்பணம் செய்து முன்னோா்களுக்கு படையலிட்டு தானம் செய்கின்றனா்.

இந்நிலையில், மஹாளய அமாவாசையையொட்டி பேரூா் நொய்யல் படித்துறையில் முன்னோா்களுக்கு நூற்றுக்கணக்கானோா் தா்ப்பணம் செய்து ஞாயிற்றுக்கிழமை வழிபட்டனா். நொய்யல் படித்துறையில் முன்னோா்களுக்கு படையலிட்டு ஆதரவற்றவா்களுக்கு உணவளித்து மஹாளய அமாவாசையை கொண்டாடினா். நொய்யல் படித்துறையில் தா்ப்பணம் செய்வதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை பேரூராட்சி நிா்வாகம் செய்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

SCROLL FOR NEXT