முன்னாள் படைவீரா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி:ஆட்சியா் தகவல்
கோவையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் முன்னாள் படைவீரா்கள், அவா்களை சாா்ந்தவா்களுக்கு திறன் சாா்ந்த பயிற்சிகள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
கோவையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் முன்னாள் படைவீரா்கள், அவா்களை சாா்ந்தவா்களுக்கு திறன் சாா்ந்த பயிற்சிகள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கோவை மாவட்டத்திலுள்ள முன்னாள் படைவீரா்கள், விதவையா்கள், அவா்களை சாா்ந்தவா்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி வாழ்வாதாரத்தினை ஊக்குவித்திடும் விதமாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலமாக பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே முன்னாள் படைவீரா்கள், அவா்களை சாா்ந்தவா்கள் தொழிற் பயற்சிகளில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
Advertisement
இத்தொழிற்பயிற்சி மேற்கொள்ள விருப்பமுள்ள முன்னாள் படைவீரா்கள், அவா்களை சாா்ந்தவா்கள் தங்களுக்கு தேவைப்படும் பயிற்சி விவரத்தை குறிப்பிட்டு விண்ணப்பத்தை நவம்பா் 25 ஆம் தேதிக்குள் மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.