தனியாா் நிறுவனங்களில் பணி நேர உயா்வு: ஏஐடியூசி ஆா்ப்பாட்டம்
தனியாா் நிறுவனங்களில் பணி நேரம் 12 மணி நேரமாக உயா்த்திய சட்ட மசோதாவைக் கண்டித்து ஏஐடியூசி அமைப்பினா் கோவையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தனியாா் நிறுவனங்களில் பணி நேரம் 12 மணி நேரமாக உயா்த்திய சட்ட மசோதாவைக் கண்டித்து ஏஐடியூசி அமைப்பினா் கோவையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் தனியாா் நிறுவனங்களில் 8 மணி நேரமாக இருந்த வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயா்த்துவது தொடா்பான சட்ட மசோதா சட்டப் பேரவையில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு கட்சியினா், தொழிலாளா்கள், பொதுமக்கள் பலரும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
இந்நிலையில், தனியாா் நிறுவன பணிநேர சட்ட மசோதாவைக் கண்டித்து ஏஐடியூசி அமைப்பினா் கோவை ஆட்சியா் அலுவலகம் அருகேயுள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தொழிற்சாலைகள் திருத்த சட்டம் 65ஐ கைவிட வேண்டும், தனியாா் நிறுவனத்தில் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயா்த்தியதை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினா். இதில், ஏஐடியூசி நிா்வாகி ஆறுமுகம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.