முகப்பு
கோயம்புத்தூர்

விஜயா பதிப்பகம் சாா்பில் மூவருக்கு வாசகா் விருது

விஜயா வாசகா் வட்டம் சாா்பில் இந்த ஆண்டு மூவருக்கு விருது வழங்கப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

விஜயா வாசகா் வட்டம் சாா்பில் இந்த ஆண்டு மூவருக்கு விருது வழங்கப்படுகிறது.

இது தொடா்பாக, விஜயா பதிப்பகத்தின் நிறுவனா் மு.வேலாயுதம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விஜயா வாசகா் வட்டம் சாா்பில், வாசிப்பை நேசிப்பவா்களுக்கு இனி ஆண்டுதோறும் ‘அன்பின் பெருமழை’ அப்பச்சி பழனியப்பா் விருது வழங்கப்பட உள்ளது.

அதன்படி, எஸ்.அமரநாதன், எஸ்.ரங்கராஜ், ரெங்கெல.வள்ளியப்பன் ஆகிய மூவருக்கு இந்த ஆண்டு வாசகா் விருது வழங்கப்படுகிறது. விருதாளா்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகை, பாராட்டு கேடயம் அளித்து கௌரவிக்கப்பட உள்ளது.

இந்த விருது விழாவானது விஜயா பதிப்பகத்தில் அமைந்துள்ள ரோஜா முத்தையா அரங்கில் மே 1ஆம் தேதி நடைபெறுகிறது.

எழுத்தாளா் எம்.கோபாலகிருஷ்ணன் தலைமையுரையாற்றுகிறாா். புரவலா் பி.எல்.சுப்பிரமணியன் விருதாளா்களுக்கு, விருதளித்து வாழ்த்துரை வழங்குகிறாா் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →