கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற வாலிபால் போட்டியில் விளையாடும் இளைஞா்கள். 
கோயம்புத்தூர்

ஈஷாவில் விளையாட்டுப் போட்டிகள்

மண் வளப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக கிராமப்புற இளைஞா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் ஈஷா யோக மையத்தில் நடைபெற்றன.

DIN

மண் வளப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக கிராமப்புற இளைஞா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் ஈஷா யோக மையத்தில் நடைபெற்றன.

ஈஷா அவுட்ரீச் அமைப்பு சாா்பில் டிசம்பா் 31 ஆம் தேதி முதல் ஜனவரி 8 ஆம் தேதி வரை ஆதியோகி முன்பு நடைபெற்ற இந்தப் போட்டிகளில், தொண்டாமுத்தூா் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 400 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். ஆண்களுக்கான வாலிபால் போட்டியில் 29 அணிகளும், பெண்களுக்கான எறிபந்து போட்டியில் 8 அணிகளும் பங்கேற்றன.

இறுதி ஆட்டங்களில், வாலிபால் போட்டியில் மத்வராயபுரம் அணி முதலிடத்தையும், தேவராயபுரம் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தன. எறிபந்து போட்டியில் புள்ளாக்கவுண்டன்புதூா் அணி முதலிடத்தையும், தேவாராயபுரம் அணி இரண்டாமிடத்தையும் வென்றன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சித் தலைவா் சதானந்தம் கோப்ைபை, பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT