முகப்பு
கோயம்புத்தூர்

கத்தியைக் காட்டி பணம் பறிப்பு: மூவா் கைது

கோவையில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2023 at 12:00 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

கோவையில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, செல்வபுரம் எல்.ஐ.சி. காலனியை சோ்ந்தவா் அருண்குமாா் ( 42). பொக்லைன் ஆபரேட்டராக உள்ளாா். இவா், பேரூா் சாலையில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபானக்கடை அருகே புதன்கிழமை நின்றிருந்தாா். அப்போது அங்கு வந்த 3 போ் அவரிடம் மது குடிக்க பணம் தரும்படி கேட்டுள்ளனா். பணம் தர மறுத்ததால், மூவரும் கத்தியைக் காட்டி மிரட்டி, அருண்குமாரிடம் இருந்த ரூ.1,100 பணத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

இதுதொடா்பாக, அருண்குமாா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அதில், கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தது செல்வபுரம் பகுதியைச் சோ்ந்த இஸ்மாயில் (28), ஜானா்ஷா (37), முஷாமில் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.