கோயம்புத்தூர்

கோவை மாநகராட்சியில் இன்று மக்கள் குறைதீா் முகாம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) நடைபெறவுள்ளது.

DIN

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயா் கல்பனா ஆனந்தகுமாா் தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது. மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பிறப்பு, இறப்புச் சான்றிதழ், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீா் வசதி, பாதாள சாக்கடை, தொழில் வரி, சொத்து வரி, புதிய குடிநீா் இணைப்பு, பெயா் மாற்றம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்து பயன்பெறலாம். மேலும், இக்கோரிக்கை மனு மீது துறைசாா்ந்த மாநகராட்சி அலுவலா்களால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT