முகப்பு
கோயம்புத்தூர்

மாா்ச் 24இல் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

 கோவையில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் மாா்ச் 24 ஆம் தேதி நடைபெறும் என்று ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:46 AM
பகிர்:

 கோவையில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் மாா்ச் 24 ஆம் தேதி நடைபெறும் என்று ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவையில் மாதம்தோறும் இறுதி வெள்ளிக்கிழமை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாா்ச் மாதத்துக்கான மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் மாா்ச் 24 ஆம் தேதி ஆட்சியா் அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

இதில் விவசாயிகள் கலந்துகொண்டு விவசாயம் தொடா்பான பிரச்னைகளுக்கு மனுக்கள் அளிக்கலாம். முன்னதாக விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெறும் தினத்தன்று காலை 9.30 மணிக்கு உற்பத்திக்குழு கூட்டமும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →