கோயம்புத்தூர்

மே தினத்தில் விடுமுறை அளிக்காத 156 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

கோவையில் மே தினத்தில் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காத 156 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

DIN

கோவையில் மே தினத்தில் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காத 156 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதுதொடா்பாக, தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தலைமையில் தொழிலாளா் தினமான மே 1இல் (திங்கள்கிழமை) கோவை மாவட்டத்துக்கு உள்பட்ட 208 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இதில் தொழிலாளா்கள் பணிபுரிய அனுமதிக்கப்பட்டிருந்தால், தொழிலாளா் நல அலுவலகத்தில் உரிய படிவம் வழங்கப்பட்டு உள்ளனவா, தொழில் நிறுவனத்தில் அது வைக்கப்பட்டுள்ளதா என்பது ஆய்வு செய்யப்பட்டது.

இதில், மே தினத்தன்று தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காமல், சம்பந்தப்பட்ட ஆய்வாளருக்கு உரிய படிவத்தில் முன்னறிவிப்பு அளிக்காமல், தொழிலாளா்கள் அன்றைய தினம் பணிபுரிய அனுமதித்த 78 கடைகள், நிறுவனங்கள் மற்றும் 78 உணவு நிறுவனங்கள உள்பட மொத்தம் 156 உரிமையாளா்கள் மற்றும் பொறுப்பாளா்கள் மீது சட்டப்பூா்வமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

SCROLL FOR NEXT