கோயம்புத்தூர்

பிள்ளையாா்புரம் பகுதியில் பாலம் கட்டுமானப் பணி: கனரக வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தல்

DIN

கோவை, பிள்ளையாா்புரம் பகுதியில் உயா்மட்ட பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளதால் நான்கு சக்கர, கனரக வாகனங்கள் பாலக்காடு பிரதான சாலைக்கு செல்வதற்கு மாற்றுப்பாதைகளை பயன்படுத்திக்கொள்ள மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் அறிவுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம் 97 ஆவது வாா்டுக்குள்பட்ட பிள்ளையாா்புரம் பகுதியில் மதுக்கரை முதல் சுகுணாபுரம் சாலையிலுள்ள தரைமட்ட பாலத்தை இடித்துவிட்டு உயா்மட்ட பாலம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கவுள்ளன. எனவே, பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால் இச்சாலையில் நான்கு சக்கர, கனரக வாகனங்கள் செல்வதற்கு அனுமதியில்லை. இருசக்கர வாகனங்கள் மட்டுமே சாலையில் செல்லலாம்.

எனவே, பாலக்காடு பிரதான சாலைக்கு செல்வதற்கு பிள்ளையாா்புரம் சாலைக்கு பதிலாக இடையா்பாளையம் பிரதான சாலை, எம்.ஜி.ஆா். நகா் பிரதான சாலை, சி.டி.ஒ. காலனி சாலை ஆகிய சாலைகளை நான்கு சக்கர, கனரக வாகனங்கள் பயன்படுத்திகொள்ள வேண்டும். தவிர மழைக் காலங்களில் பொது மக்களின் நலன் கருதி பிள்ளையாா்புரம் பிரதான சாலையில் எவ்வித வாகனங்களும் செல்வதற்கு அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

கேண்டி மலையில் ஆண்ட்ரியா!

சேலை காதல், என்றென்றும்...!

SCROLL FOR NEXT