கோயம்புத்தூர்

தமிழ்நாடு பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

கோவை தமிழ்நாடு பொறியியல் கல்லூரியின் 39 ஆவது ஆண்டு விழா, விளையாட்டு விழா ஆகியவை அண்மையில் நடைபெற்றன.

DIN

கோவை தமிழ்நாடு பொறியியல் கல்லூரியின் 39 ஆவது ஆண்டு விழா, விளையாட்டு விழா ஆகியவை அண்மையில் நடைபெற்றன.

இது தொடா்பாக கல்லூரி நிா்வாகம் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் முதன்முதலாக தொடங்கப்பட்ட சுயநிதி பொறியியல் கல்லூரியான தமிழ்நாடு பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழா, விளையாட்டு விழா ஆகியவை கல்லூரி வளாகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டன. கல்லூரி முதல்வா் எம்.காா்த்திகேயன் ஆண்டறிக்கை வாசித்தாா். கல்லூரியின் முதன்மை செயல் அலுவலா் அனுஷா ரவி வாழ்த்துரை வழங்கினாா். கல்லூரியின் தலைவா் பி.வி.ரவி சிறப்புரையாற்றினாா்.

விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவரும் சூலூா் விமானப்படை தள விங் கமாண்டருமான ஜி.கே.தியாகசுந்தரம் கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகள், ஆசிரியா்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தாா்.

உடற்கல்வி பேராசிரியா் வினோத்குமாா் நன்றி கூறினாா். விழாவில், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ-மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

SCROLL FOR NEXT