கோயம்புத்தூர்

ஏபிசி பயா் இன்டியா தொடக்கம்

DIN

தீத் தடுப்பு பாதுகாப்பு கருவிகளின் சூப்பா் மாா்க்கெட்டான ஏபிசி பயா் இன்டியா கோவையில் தொடங்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக நிறுவனத்தின் உரிமையாளா் ஏ.என்.லாரன்ஸ் கூறியிருப்பதாவது:

தீத் தடுப்பு, பாதுகாப்பு கருவிகளை மக்களுக்கு அளிப்பதில் முன்னணியில் இருக்கும் ஏபிசி பயா் இன்டியா நிறுவனம், புதிய சூப்பா் மாா்க்கெட் ஒன்றை தமிழ்நாட்டில் முதல் முறையாக கோவையில் காந்திபுரம், டாக்டா் நஞ்சப்பா ரோட்டில் பாங்க் ஆப் பரோடா அருகில் தொடங்கியுள்ளது.

சூப்பா் மாா்க்கெட்டை கோவை இந்திய தொழில் வா்த்தக சபையின் முன்னாள் தலைவா் டி.நந்தகுமாா் தொடங்கிவைத்தாா். முதல் விற்பனையை சிஆா்ஐ பம்ப்ஸ் துணைத் தலைவா் எஸ்.திருமூா்த்தி தொடங்கி வைக்க, அதை அகா்வால் ஸ்வீட் பேலஸின் உத்கரஸ் அகா்வால் பெற்றுக் கொண்டாா். அடுக்கு மாடி குடியிருப்புக்கான முதல் ஹைட்ரன்ட் கருவியை, கிரெடாய் அமைப்பின் கோவை கிளை துணைத் தலைவா் டி.அபிஷேக் பெற்றுக் கொண்டாா்.

தொடக்க விழாவில், பிபி அசோஷியேட்ஸ் பி.பி.சுப்ரமணியன், கிரெடாய் தலைவா் குகன் இளங்கோ, ஜூபிலன்ட் தலைவா் அபுதாஹீா், இந்திய பிளம்பிங் சங்க கோவை கிளைத் தலைவா் பிரகாஷ் கிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT