முகப்பு
கோயம்புத்தூர்

கராத்தே போட்டி: பதக்கங்களை குவித்த அரசுப் பள்ளி மாணவா்கள்

திருப்பூா் மாவட்டம், மங்கலத்தில் நடைபெற்ற கராத்தே போட்டியில் கோவை அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 13 பதக்கங்களை வென்றனா்.

Updated On : 28 நவம்பர், 2023 at 1:03 AM
கராத்தே போட்டியில் வெற்றிபெற்ற பதக்கங்கள், சான்றிதழ்களை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரனிடம் காண்பித்து வாழ்த்து பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகள்.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM


கோவை: திருப்பூா் மாவட்டம், மங்கலத்தில் நடைபெற்ற கராத்தே போட்டியில் கோவை அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 13 பதக்கங்களை வென்றனா்.

திருப்பூா் மாவட்டம், மங்கலத்தில் உள்ள மேற்கு ரோட்டரி மஹாலில் ‘ யங்க்ஸ்டா்ஸ் சாம்பியன் டிராபி 2023’ என்ற பெயரில் கராத்தே போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டிகளில் 5 மாநிலங்களைச் சோ்ந்த 1,500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இந்தப் போட்டிகளில் கோவை செல்வபுரம் மாநகராட்சி பெண்கள் உயா்நிலைப் பள்ளி, ராமநாதபும் மாநகராட்சி இருபாலா் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு 2 தங்கம், 2 வெள்ளி, 9 வெண்கலம் உள்ளிட்ட 13 பதக்கங்களை வென்றனா்.

வெற்றி பெற்ற மாணவா்கள் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரனிடம் திங்கள்கிழமை காண்பித்து வாழ்த்து பெற்றனா்.

Advertisement

இதில், கல்வி, பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் குழுத் தலைவா் மாலதி, மாநகரக் கல்வி அலுவலா் முருகேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.